தைரியமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்... அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்...

தமிழகத்தில் பெற்றோர்கள், குழந்தைகளை தைரியத்துடன் பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.

தைரியமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்... அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி  சுவாமி தரிசனம் செய்தார்.
 
பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால், கொரோனா தொற்று குறைந்து வருவதாக தெரிவித்தார். மேலும்,  மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
 
இதனால் பெற்றோர்கள் அச்சம் தவிர்த்து தைரியத்துடன்  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.